எபோலா தாக்கி ஜேர்மனியில் சிகிச்சை பெற்று வந்த ஐ.நா பணியாளர் ஒருவர் பரிதாபமாய் உயிரிழந்துள்ளார்.
மேற்கு ஆப்ரிக்காவின் சூடான் நாட்டை சேர்ந்த ஐ.நா பணியாளர் ஒருவர் (Age-56), எபோலாவால் பாதிக்கப்பட்டதால் கடந்த 9ம் திகதி லைபீரியாவில் இருந்து ஜேர்மனிக்கு மிகுந்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டார்.
அன்று முதல் தீவிர சிகிச்சையை இவர் பெற்றபோதும், எந்த ஒரு முன்னேற்றமும் இவரது உடல்நிலத்தில் இல்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் அவருக்கு நோயின் தாக்கம் அதிகம் காணப்பட்டதால் நேற்று நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாய் உயிரிழந்துள்ளார்.
இத்தகவல் அவருக்கு சிகிச்சை அளித்த லேப்சிங் (Leipzig)நகரில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கிளினிக்(Saint George Clinic) மருத்துவர்கள் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூடான் நாட்டில் மருத்துவராய் பணியாற்றிய போது இந்நோய் தொற்றி இருக்கலாம் என கருதப்படுகிறது.

