பிரித்தானியாவில் மெற்றோ பொலிடன் பொலிசில் வேலை பார்க்கும், இந்திய வம்சாவளிப் பெண்ணான ஷமீனா டிகாலி ரோந்துக்கு சென்றவேளை ஒரு ஆணுக்கு தனது மோபைல் போன் நம்பரைக் கொடுத்துள்ளார். அத்தோடு அவரது நம்பரையும் இவர் எழுதி வாங்கியுள்ளார். இவை அனைத்தும் எப்போது நடந்து என்று கேட்டால் அதிர்ந்து போவீர்கள். குறித்த நபர் மிகவும் விலையுயர்ந்த போஷ் காரில், சென்றுகொண்டு இருந்தவேளை ஷமீனாவும் அவரோடு வேலைபார்க்கும் மற்றைய பொலிஸ் நபரும் பொலிஸ் காரில் சென்றுள்ளார்கள். முன்னால் செல்லும் போஷ் காருக்கு இன்சூரன்ஸ் இல்லை என்ற விடையம் இவர்கள் கம்பியூட்டர் திரையில் விழுந்துள்ளது. அதன் காரணமாக அவர்கள் இந்த போஷ் காரை மறித்துள்ளார்கள். ஆனால் உள்ளே இருந்த ஆணோ மிகவும் கவர்சிகரமாக பேசியுள்ளார்.
இதனால் காதல் மயக்கத்தில் விழுந்த ஷமீனா, அந்த வாலிபரை ஒன்றுமே செய்யாது அப்படியே அனுப்பிவிட்டார். இன்சூரன் இல்லாது காரை ஓட்டுவது பிரித்தானியாவைப் பொறுத்தவரை பாரிய குற்றமாகும். ஆனால் இப்பொலிசார் எதனையும் செய்யவில்லை. நம்பரை வாங்கிக்கொண்ட ஷமீனா உடனே அவருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப ஆரம்பித்துவிட்டார். காமத்தை தூண்டும் வகையில் இருவரும் ரெக்ஸ் மூலமாக சல்லாபித்துக்கொண்டார்கள். இது போதாது என்று, ஈமெயில் மூலமாகவும் அவர்கள் காதல் தொடர ஆரம்பித்தது. வேலை நேரங்களில் இவ்வாறு சல்லாபம் செய்துகொண்டு இருந்த இவர்கள் வசமாக மாட்டிக்கொண்டார்கள். பொலிஸ் நிலையத்தினுள் இருக்கும் கம்பியூட்டரிலேயே சல்லாப ஈமெயில் அனுப்பினால் என்னவாகும்.
ஏற்கனவே பிரித்தானியா அல்-கைடா எப்போது தாக்கும் என்று தெரியாமல் தனது சைபர் பிரிவை கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டு தேடுமாறு பணித்துள்ளது. இவ்வாறு பொலிஸ் கம்பியூட்டர்களை அவதானிக்கும் சைபர் பிரிவினர் இவர்களின் காதல் லீலைகளை இடைமறித்து அறிந்துகொண்டார்கள். இதனூடாக அவர்களுக்கு இடையே என்ன நடந்தது எப்போது நணர்கள் ஆனார்கள் என்று எல்லாம் அறிந்து, ஷமீனாவை வேலையில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளார்கள்.
Home
»
World
»
World_news
»
உலகச் செய்திகள்
» இந்தியப் பெண் பொலிசாரின் காமலீலை அம்பலம்: பிரித்தானிய நீதிமன்றில் அவற்றை பற்றி விபரித்தார்கள் !
Tagged with: World World_news உலகச் செய்திகள்
About Unknown
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.