யாழ்.தேவியை யாழ்ப்பாணத்திற்கு அனுப்ப பளைக்கு சென்ற இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய, பளையுடனே காணாமல் போயிருந்தார். அவரை யாழ்.தேவியின் பயணத்தினில் ஊடகவியலாளர்கள் பலரும் தேடித்திரிந்த போதும் அவர் காணப்படவில்லை. பளையிலிருந்து ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்ட போது அவர் தனது சகோதரரர் மஹிந்தவுக்கு அருகில் நின்றிருந்தார். எனினும் அது ஒரு சில உள்ளுர் ஊடகவியலாளர்களால் படம்பிடிக்கப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணம் நோக்கிய பயணத்திற்கென அவரும் யாழ்.தேவியில் ஏறியதாகவும் எனினும் பின்னர் அவரை காணவில்லை எனவும் அவர்கள் கூறுகின்றனர். தெற்கிலிருந்து அரச அமைச்சர்களான பலரும் சென்றிருந்த போதும், அவர்களில் பலரும் மஹிந்தவுடனேயே திரிந்தனர். எனினும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாயவோ இடையில் காணாமல் போயிருந்தமை பலரிடையேயும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.