மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணியின் அணித்தலைவராக ரெய்னா களமிறங்கவுள்ளார்.
கடந்த 2010 ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ரெய்னா சதம் விளாசினார். ஆனால் அதன் பிறகு மீண்டும் டெஸ்ட் அணியில் அவர் தெரிவு செய்யப்படவில்லை.
இந்நிலையில் டெஸ்ட் அணியில் ரெய்னா மீண்டும் இடம் பெற இந்திய அணியின் இயக்குனராக உள்ள ரவி சாஸ்திரி முடிவு செய்துள்ளார்.
அதன் படி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள பயிற்சி ஆட்டத்தில் போர்டு பிரசிடென்ட் லெவன் அணியில் அணித்தலைவராக ரெய்னா இறங்கவுள்ளார். 3 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சி போட்டி டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நடக்கவுள்ளது.
போர்டு பிரசிடென்ட் லெவன் அணி:
சுரேஷ் ரெய்னா (அணித்தலைவர்), ஜீவன்ஜூட் சிங், ராகுல், நமன் ஓஜா ரோஹித் சர்மா, மனோஜ் திவாரி, ரித்திமான் சாஹா, கருண் நாயர், பர்வேஸ் ரசூல், பங்கஜ் சிங், ஈஷ்வர் பாண்டே, ஜஸ்ப்ரிட் பூம்ரா, கர்ண் சர்மா, குல்தீப் யாதவ்.