Select Menu

Slider

Powered by Blogger.

Srilanka

World News

Technology

Medical News

India

World 360

» » » » » » » » உல்லாச திருமணத்திற்காக யாழ் செல்லும் கனடா- லண்டன் மாப்பிள்ளைகள் !
«
Next
Newer Post
»
Previous
Older Post

உல்லாச திருமணம் செய்ய கனடா மற்றும் லண்டனில் இருந்து யாழ் செல்லும் மாப்பிள்ளைகள்: உஷார் மக்களே உஷார் ! பெண்களை தமது காமப் பசிக்கும் இரையாக்கி வரும் சில தமிழ் இளைஞர்கள்:
ஆம் கடந்த 6 மாதங்களில் மட்டும், சுமார் 8 போலியான பதிவு திருமணங்கள் இவ்வாறு இடம்பெற்றுள்ளது. இவை நாம் அறிந்தவை. அறியாமல் பல இவ்வாறு நடந்திருக்கலாம். கனடா மற்றும் லண்டனில் இருந்து வெளியாகும் சில ஓசிப் பத்திரிகையில், திருமண பக்கம் என்று ஒன்று உள்ளது. அதில் மண மகள் தேவை, அல்லது மண மகன் தேவை என்று இலவச விளம்பரத்தையும் போடுகிறார்கள். லண்டன் மற்றும் கனடாவில் உள்ள சில துணிந்த இளைஞர்கள், இதனை பாவித்து பெரும் ஏமாத்து வேலைகளில் ஈடுபடுவதோடு நின்றுவிடாது, பெண்களை தமது காமப் பசிக்கும் இரையாக்கி வருகிறார்கள்.
குறிப்பாக யாழில் உள்ள பெண்னுக்கு மணமகன் தேவை என்ற விளம்பரத்தை, பார்கும் சில இளைஞர்கள் யாரவது ஒரு நபரை விட்டு முதலில் அவர்களை தொடர்புகொள்ள வைக்கிறார்கள். பின்னர் பெண்ணின் அப்பா அம்மாவுடன் பேசி, யாழில் வந்து பெண் பார்பதாக கூறி அவர்களை சம்மதிக்கவும் வைக்கிறார்கள். இதன் பின் நடப்பது தான் ரத்தத்தை உறையவைக்கும் விடையம். யாழ்பாணம் செல்லும் அந்த இளைஞர், முதலில் வீட்டாருடன் நல்ல விதமாக பேசி, பின்னர் பெண்ணையும் பார்கிறார்கள். இதற்கு இடையே தான் சில சித்த விளையாட்டுகள் நடைபெறுகிறது. கனடாவில் உள்ள தனது அப்பா அம்மாவுக்கு பெண்ணை பிடிக்கவில்லை என்றும், ஆனால் தனக்கு பெண்ணை பிடித்துவிட்டதாகவும் இவர்கள் ஆசை வார்த்தை கூறுகிறார்கள். இதனை சில பெற்றோர் நம்பியும் விடுகிறார்கள்.
வெகு தூரத்தில் இருந்து வந்துள்ளதால், யாழில் பதிவுத் திருமணத்தை முடித்துவிட்டு செல்ல உள்ளதாக மாப்பிள்ளை கூறுவார். அத்தோடு குறைந்த ஆட்களை அழையுங்கள். கல்யாண வீட்டை பிரம்மாண்டமாக செய்யலாம் என்றும் இவர்கள் கூறுவார்கள். இவர்கள் பேச்சை நம்பிய பெற்றோர் கனடா மாப்பிள்ளைக்கு ஆசைப்பட்டு, பதிவு திருமணத்தை நடத்திவிடுகிறார்கள். இதில் தேதனையான விடையம் என்னவென்றால், மாப்பிள்ளை தரப்பில் இருந்து நண்பர்கள் கூட இந்த பதிவு திருமணத்தில் கலந்துகொண்டிருக்கமாட்டார்கள் என்பது தான். இவ்வாறு திருமணம் முடிந்ததும், நான் இன்னும் சில நாட்களே யாழில் இருப்பேன், சில இடங்களை சுற்றிப் பார்கிறோம் என்று சொல்லி தம்பதியினர் அங்கே இங்கே செல்ல ஆரம்பித்து விடுவார்கள். பின்னர் என்ன யாழில் இருக்கவே இருக்கிறது இதற்காக என்று விடுதிகள்.
அதில் ஒன்றை எடுத்து பெண்ணோடு உல்லாசமாக இருந்துவிட்டு, பின்னர் அவர்கள் அப்படியே கனடா அல்லது லண்டன் சென்றுவிடுகிறார்கள். மாப்பிள்ளை ஒரு நாள் திரும்பி வருவார் என்று இப்பெண்கள் வீட்டு வாசலில் காத்து இருப்பதும், தொலைபேசி எடுப்பார் என்று போனைக் கையில் வைத்துக்கொண்டு அலைவதும் தான் மிச்சம். ஆனால் மாப்பிள்ளையிடம் இருந்து எதுவும் வராது. இவ்வாறு தான் செய்தேன் என்று அந்த இளைஞர் பெருமையாக தனது நண்பர்களிடம் கூட, அதில் இருக்கும் ஒருவரும் இதனை செய்து பார்த்தால் என்ன ? என்று நினைப்பார். இதுபோல இந்த கலாச்சாரம் தற்போது பரவ ஆரம்பித்துள்ளது. சீதனம் எதுவும் இலாமல், கனடா அல்லது லண்டன் மாப்பிள்ளையை வளைத்து போடலாம் என்று நினைக்கும் பெற்றோருக்கும் இது ஒரு நல்ல பாடமாக அமைகிறது. சீதனம் கொடுக்கவேண்டும் என்று நியதி இல்லை.
ஆனால் மாப்பிள்ளையை பற்றி விசாரிக்காமல் , எதுவுமே செய்யாமல் 22 வருடமாக வளர்த்த தமது பெண் பிள்ளையை இவ்வாறு ஒருவர் தலையில் கட்டிக் கொடுக்கிறார்களே, இவர்களைப் போன்ற் பெற்றோரை என்ன செய்வது ?

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
«
Next
Newer Post
»
Previous
Older Post