கென்யா நாட்டில் உள்ள குக்கிராமம் ஒன்றில் உள்ள மனைவிமார் பலர், தமது கணவர்கள் கட்டிலில் திறமையானவர்களாக இல்லை என்று முறைப்பாடு செய்துள்ளார்கள். அட திறமையானவர்களாக இல்லையா ? என்று நினைத்து குழம்பவேண்டாம். எல்லாம் அந்த மேட்டரை தான் அவர்கள் கூறியுள்ளார்கள். இதற்கு காரணம் என்னவென்றால் சுண்ணத் செய்த ஆண்கள் மிகவும் திறமையானவர்கள் என்றும், ஆனால் தமது கணவன் மார் சுண்ணத் செய்யவில்லை என்றும் அவர்கள் புகார் கூறியுள்ளார்கள். குறித்த 12 மனைவிகளும் அளித்த புகாரின் அடிப்படையில், கென்ய அதிகாரிகள் பல கணவன் மாரை சுற்றிவளைத்தும் மற்றும் மறைந்திருந்து பிடித்தும் கட்டாயமாக சுண்ணத் செய்துள்ளார்கள்.
கென்யா நாட்டை பொறுத்தவரை பல ஆண்கள் சுண்ணத் செய்துள்ளார்கள். ஆனால் சில கிராமங்களில் சில பெற்றோர்கள் தமது ஆண் குழந்தைகளுக்கு சுண்ணத் செய்வது கிடையாது. இப்படியான ஆண்களை அதிகாரிகள் தேடிக் கண்டு பிடித்து சுண்ணத் செய்து வருகிறார்கள். இந்த வகையில் தமது கணவரை வெற்றிகரமாக சில பெண்கள் மாட்டிவிட்டுள்ளார்கள். இவர்கள் போன்ற ஆண்கள் இனி சுண்ணத் செய்ய ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இதனால் அவர்களை அதிகாரிகள் மடக்கி பிடித்து கட்டாயமாக சுண்ணத் செய்துள்ள விடையம் அன் நாட்டில் இல்லை ஆனால் மேற்குலகை அதிரவைத்துள்ளது.
கென்யா போன்ற நாடுகளில், பல்வேறு குற்றச்செயல்கள் நடைபெற்று வருகிறது. அவை அனைத்தையும் பிடிக்க வக்கில்லாத அரசு இதனை மட்டும் ஒரு பெரியவிடையமாக எடுத்து நிறைவேற்றி வருகிறது என்பது தான் மேற்குலகில் உள்ளவர்களின் ஆதங்கம்.
Home
»
World
»
World_news
»
உலகச் செய்திகள்
» கட்டிலில் எனது கணவர் திறமையானவராக இல்லை: மனைவிகளின் முறைப்பாட்டை அடுத்து 12 கணவன்மாரை பிடித்த அதிகாரிகள் !
Tagged with: World World_news உலகச் செய்திகள்
About Unknown
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
