
மொகன்லால்கஞ்சில் நடந்த கொடூர கொலையை சிபிஐ எடுத்து விசாரிக்க வேண்டுமென்று பொதுமக்கள் மற்றும் அரசியல் வாதிகள் போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கையில் தற்போதைய் ஆளுநராக இருக்கும் ஆஷிஷ் குரேஷி கடவுளே மாநிலத்திற்கு வந்தாலும் இந்த பாலியல் கொடுமைகளை தடுப்பது கடினம் என்று கூறி புதிய பிரச்சனையை வளர்த்துள்ளார் .
அவர் கூறுகையில் , " மொத்த போலிஸ் மற்றும் ராணுவப் படைகளை நிறுத்தினாலும் பாலியல் கொடுமைகளை தடுக்க முடியாது . வெறும் காவல் துறையினால் மட்டும் இதனை தடுத்து விட முடியாது . மேலும் கடவுளே வந்தாலும் உத்தர பிரதேசத்தில் நடக்கும் கற்பழிப்புகளை தடுக்க முடியாது என்று கூறினார் .
பின்னர் தன்னுடைய முந்தைய பேச்சிற்கு பதிலளிக்கும் வகையில் இன்னொரு பேட்டியில் , " பாலியல் கொடுமைகளை தடுக்க மக்கள் மனதில் ஒரு மாற்றம் வர வேண்டும் .குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் . நான் இதை உணர்த்தவே மொத்த போலிஸ் மற்றும் ராணுவப் படைகளை நிறுத்தினாலும் பாலியல் கொடுமைகளை தடுக்க முடியாது என்று கூறினேன் . மேலும் இந்த பாலியல் கொடுமைகளை தடுக்க கடவுள் அவதாரம் எடுத்து வந்தால் தான் முடியும் " என்றார் .
Home
»
India
»
Indian_news
»
World_news
»
இந்தியா செய்திகள்
» கடவுளே வந்தாலும் உத்தர பிரதேசத்தில் நடக்கும் கற்பழிப்புகளை தடுக்க முடியாது - மாநில ஆளுநரின் சர்ச்சைக்குரிய பேச்சு !!
Tagged with: India Indian_news World_news இந்தியா செய்திகள்
About Unknown
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.