
ஜூன் மாதம் அன்று ஆந்திர பிரேதச மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது. இவை ஆந்திரம், தெலுங்கானா என அழைக்கப்பட்டன . பல போராட்டங்களுக்கு பிறகு இந்த அறிவிப்பு வந்தது. இதற்கு பல உயிர்கள் இந்த உலகை விட்டு பிரிந்து உள்ளன. ஆனால் அந்த மாநிலத்தின் தரத்தை உயர்த்துவதற்கு மத்திய அரசின் உதவிகள் அதிகம் தேவை படுகிறது. அதனால் அவர்களுடன் ஒரு உடன்பாட்டுடன் அந்த மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் ஆட்சி அமைத்து வருகிறார்.

இப்போது அந்த மாநில தூதராக அந்த மாநிலத்தின் பிரபலமான டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அந்த மாநிலத்தின் சிறப்பை வெளிப்படுத்துவதற்காக அவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இது தொடர்பாக மாநில முதல்வரை சந்தித்து பேசினார். அவர் இந்த வேலைக்கு சம்பளமாக ஒரு கோடி மதிப்பிலான காசோலையை தந்து உள்ளார்.