Select Menu

Slider

Powered by Blogger.

Srilanka

World News

Technology

Medical News

India

World 360

» » பசிக்கொடுமை தாங்காமல் தற்கொலைக்கு முயன்ற சம்பூர் முதியவர்
«
Next
Newer Post
»
Previous
Older Post

பசியின் கொடுமை காரணமாக சில நாட்களுக்கு முன்பு கிளிவெட்டி இடைத்தங்கல் முகாமில் 80 வயது வயோதிபரொருவர் பிளேடினால் தனது கழுத்தை வெட்டி தற்கொலை செய்ய முயன்றுள்ளதாக கூறப்படும் சம்பவமொன்றும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மயில்வாகனம் தாமோதிரம் என்ற இந்நபர் அரச மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
 
உலக உணவு தினமாகிய ஒக்டோபர் 16 வியாழனன்று பிபிசி தமிழோசையுடன் பேசிய அவரது மனைவி யோகேஸ்வரி, சம்பவ தினம் தனது கணவன் மதிய உணவு கேட்டபோது வீட்டில் சோறு சமைக்க அரிசி இருக்கவில்லை என்றார்.
பசியின் கொடுமை காரணமாகவே தனது கணவன் இப்படி நடந்து கொண்டதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
 
ஏற்கனவே 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை உலக உணவு திட்டத்தின் கீழ் இந்த குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் உலர் உணவு நிவாரண உதவிகள் கிடைத்ததாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரான குமாரசாமி நாகேஸ்வரன் தெரிவிக்கிறார்.
அந்நிவாரண உதவிகள் நிறுத்தப்பட்ட பின்னர் எந்தவொரு நிவாரண உதவிகளும் இவர்களுக்கு கிடைக்கவில்லை.
 
2012 ஆகஸ்ட் மாதம் கிழக்கு மாகாண சபையில் இம்மக்களுக்கான நிவாரண உதவிகள் தொடர்பாக தன்னால் சுட்டிக்காட்டப்பட்டபோதிலும் இதுவரை மாகாண சபை அதில் அக்கறை காட்டவில்லை என்றும் அவர் கவலை வெளியிட்டார்.
இது தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜித்தை தொடர்பு கொண்டு அவரை பதிலை பெற பல தடவைகள் முயன்ற போதிலும் அவரது பதிலை பெற முடியவில்லை.
 
இலங்கையில் கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேச அகதிகளுக்கு நிவாரண உதவிகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இவ்வாறாக அவர்கள் தொடந்தும் உணவு உணவுப் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
 

About jvp

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
«
Next
Newer Post
»
Previous
Older Post