Select Menu

Slider

Powered by Blogger.

Srilanka

World News

Technology

Medical News

India

World 360

» » காதலி வீட்டில் உல்லாசமாக இருந்த சிறுவன் அடித்து கொலை
«
Next
Newer Post
»
Previous
Older Post

உத்தரபிரதேசத்தில் 15 வயது பெண்ணுடன் உல்லாசமாக இருந்த 17 வயது சிறுவனை பெண்ணின் குடும்பத்தினர் கொன்றதோடு, தங்கள் பெண்ணுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்ய முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் மொராதாபாத் மாவட்டத்திலுள்ள பார்டல் கிராமத்தை சேர்ந்த மக்கான்சிங்கிற்கு சுக்வீர், சுனில், சுஷில் என்ற மகன்களும், 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் மக்கான்சிங்கின் மகள், 17 வயதான ராகேஷ் சிங் என்ற வாலிபரை காதலித்துதுள்ளார்.
நேற்று மக்கான் சிங் குடும்பத்தில் மகளை தவிர பிறர் வெளியே சென்றிருந்தபோது காதலனை வீட்டுக்கு அழைத்த அந்த பெண், படுக்கையறையில் உல்லாசமாக இருந்துள்ளார்.
பின்னர் எதிர்பாராதவிதமாக மக்கான்சிங் மற்றும் குடும்பத்தார் வீடு திரும்பியதால் இருவரையும் அடித்து உதைத்துள்ளனர்.
மேலும் ராகேஷ்சிங்கின் கழுத்தை இறுக்கி கொலை செய்த அவர்கள் தங்கள் வீட்டு பெண்ணின் வாயில் வயலுக்கு வைத்திருக்கும் பூச்சி மருந்தை எடுத்து ஊற்றியுள்ளனர்.
இந்நிலையில் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் குடும்பத்தார் அனைவரும் தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் அறிந்து வந்த பொலிசார், மயக்க நிலையில் கிடந்த பெண்ணை மொராதாபாத் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்ததோடு ராகேஷ் சிங்கின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்துள்ளனர்.
இதையடுத்து பெண்ணின் குடும்பத்தினர் மீது பொலிசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும், பொலிசார் இந்த கொலையை கவுரவ கொலையாக கருதுவதால் வழக்கின் ஒரே சாட்சியமான பாதிக்கப்பட்ட பெண் இயல்பு நிலைக்கு திரும்பினால்தான் விசாரணை செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

About jvp

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
«
Next
Newer Post
»
Previous
Older Post