கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உக்கிரேன் நாட்டிற்கு மேலாக பறந்த மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது யாவரும் அறிந்ததே. MH 17 என்னும் குறியுடன் பறந்த இந்த விமானம் தொடர்பாக அடிக்கடி பரபரப்பான தகவல்கள் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. அது வழமையான பாதையில் செல்லாமல், 28,000 டாலர் பெறுமதியான எரிபொருளை மிச்சப்படுத்தவே , உக்கிரேன் ஊடாக பைபாசில் பறந்தது என்ற தகவல் ஒருபுறம் இருக்க, இந்த விமானத்தின் பாகங்களில் பல துளைகள் காணப்படுகிறது. குறிப்பாக இந்த விமானத்தின் பாகங்களில் ஏவுகணை தாக்கிய இடம் என்று , ஒன்றும் இல்லையாம். ஆனால் பல துளைகள் காணப்படுகிறது என்று கண்டுபிடித்துள்ளார்கள். இது துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட துளைகளும் அல்ல.
அப்படி என்றால் நிலத்தில் இருந்து ஏதோ ஒரு கனராக ஆயுதம் ஒன்றை பாவித்தே விமானத்தை சுட்டுள்ளார்கள் என்று மலேசிய அதிகாரிகள் தற்போது அதிர்சி தகவல் வெளியிட்டுள்ளார்கள். விழுந்துபோன விமானத்தின் பாகங்களை எடுத்துச் சென்று மலேசிய அதிகாரிகள் ஆராய்ந்து வருகிறார்கள். இதற்கு அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளும் உதவி வருகிறது. இன் நிலையில் வீமானத்தில் காணப்படும் துளைகள், எதனால் ஏற்பட்டது என்று கண்டு பிடிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. வீமானத்தின் முன் பாகம் , இறக்கை உள்ள பாகம் மற்றும் பின் புறங்களில் இந்த பாரிய துளைகள் காணப்படுகிறது.
காக்பிட் என்று சொல்லப்படும் விமானியின் அறையில் கூட, கீழ் புறமாக இந்த துளைகள் காணப்படுகிறது. ரஷ்யா படு பயங்கரமான ஆயுதம் ஒன்றை உக்கிரேனில் உள்ள தனது ஆதரவு பெற்ற கிளர்சியாளர்களிடம் கொடுத்துள்ளதா என்ற சந்தேகங்களும் தற்போது எழுந்துள்ளது. இல்லையென்றால் விமானத்தை தாக்கி அழிக்கும் ஏவுகனை, விமானத்தை முட்ட முன்னரே வெடித்து, அதில் இருந்து சிதறிய துண்டுகள் விமானத்தில் பட்டிருக்கவேண்டும் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த இந்த சந்தேகங்களை கண்டுபிடிக்க ஜப்பான் நாடும் , களத்தில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.