2009ம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னர், யாழில் உள்ள பலாலிப் பகுதியில் என்ன நடக்கிறது ? என்ற அதிரும் புகைப்படங்களை அமெரிக்க சட்டலைட் நிறுவனம் ஒன்று எடுத்துள்ளது. புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள் என்று கூறிவரும், இலங்கை அரசு தமது இராணுவத்தை மேலும் மேலும் விஸ்தரித்து வருகிறது என்ற அதிர்சி தகவலும் தற்போது இதனூடாக வெளியாகியுள்ளது. பலாலி விமான தளத்தினை அண்டியுள்ள பகுதியில், இலங்கை இராணுவம் மேற்கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பாக தெளிவாக , இலங்கை அரசின் அனுமதி இன்றியே உயர் பாதுகாப்பு வலையத்தை அமெரிக்க நிறுவனம் ஒன்றுசாட்டலைட் உதவியோடு American Association for the Advancement of Science (AAAS) படம் பிடித்து, அதனை ஆராய்ந்துள்ளார்கள் என்பதும் மிக முக்கியமான விடையம் ஆகும். இங்கே என்ன நடக்கிறது என்பதனை சற்று விரிவாகப் பார்ப்போம்.

பலாலியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இராணுவத்தினர் 2009ம் ஆண்டுக்கு பின்னர் பல கட்டடங்களை கட்டி வருகிறார்கள். இவற்றில் பல, இராணுவத் தளங்களும், விடுதிகளும் அடங்குகிறது. பலாலி பகுதி உயர் பாதுகாப்பு வலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. ஆனால் அங்கே இராணுவத்தினர் என்ன கட்டுமாணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதனை அமெரிக்க சட்டலைட் துல்லியமாக படம் எடுத்து உள்ளது. "இலங்கையில் நீதி மற்றும் அமைதிக்கான பிரச்சாரம்" என்னும் அமைப்பினர் (Sri Lanka Campaign for Peace and Justice ) அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனத்திடம் விடுத்த கோரிக்கை ஒன்றுக்கு அமைவாகவே இந்த சட்டலைட் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு , பல ஆராட்சிகள் நடைபெற்றுள்ளது. பல ஏக்கர் கணக்கிலான பனைமரங்கள் , தென்னை மற்றும் காடுகள் அழிக்கப்பட்டு, அங்கே இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இன் நிலையை நாம் பார்த்தால், இன்னும் 100 வருடங்களுக்கு சிங்கள இராணுவமானது யாழ் மண்ணை விட்டுச் செல்லாது என்பது உறுதியாக தெரிகிறது. விடுதலைப் புலிகள் வன்னிப் பெருநிலப் பரப்பை பிடித்து, பல ஆண்டுகளாக தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து வைத்திருந்தார்கள். போர் நடைபெற்ற காலகட்டங்களில் கூட, பலாலி இராணுவ முகாமும் அதன் சுற்றுவட்டாரமும் இவ்வளவு தூரம்விஸ்தரிக்கப்பட்டது இல்ல. ஆனால் தற்போது அது இராணுவமயமாக்கப்பட்டு வருகிறது. அங்கே அமைக்கப்படும் சிறிய விடுதிகள், இராணுவத்தினரின் உறவினர்கள் வந்தால் தங்கிச் செல்லவே அமைக்கப்பட்டும் வருகிறது. கீழ் காணும் புகைப்படங்களை நன்றாகப் பாருங்கள். எவ்வளவு தூரம் காடுகள் அழிக்கப்பட்டுள்ளது என்பதும், இராணுவத் தளங்கள் அமைக்கப்பட்டு வருகிறது என்பதும் புரியும். புது புது வீடுகள், கட்டடங்களும் அங்கே கட்டப்பட்டு வருகிறது.
2009 ல் எவ்வளவு வேலைப்பாடுகள் அவதானிக்கப்பட்டது என்று பாருங்கள். இதேவேளை 2014ம் ஆண்டில் எவ்வளவு வேலைப்பாடுகள் தற்போது நடைபெறுகிறது என்பதனையும் அட்டவணையில் பாருங்கள். அனைத்து விடையங்களும் புரியும்.
அமெரிக்காவில் உள்ள தனியார் கம்பெனியின் இணையத்தை பார்க இங்கே சொடுக்கவும்.Click here to see the ENGLISH REPORT


