யாழ். பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவன் ஒருவர் இன்று அதிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கலைப்பீட முதலாம் வருடத்தில் கல்வி பயிலும் நெல்லியடி பிரதேசத்தைச் சேர்ந்த நாகராசா சுதாகரன் (வயது 21) என்ற மாணவனே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.
குறித்த மாணவன், தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதேவேளை, இன்று அதிகாலை 4 மணியளவில் தனது முகப்புத்தகத்தில் "மறு பிறவி இருந்தால் மீண்டும் வருகிறேன் உன் மடியில் சாய்ந்து உயிர் பிரியும் என்றால்" என்று அவர் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக மாணவன் தூக்கிட்டு தற்கொலை
